மின் நுகர்வோர் கவனத்திற்கு – ஆதார் எண் இணைப்புக்கான கால அவகாசம் முடிவு!!
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் விரைவில் முடிவடைய இருக்கிறது. இந்த இணைப்பு இருந்தால் மட்டும் நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்த முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆதார் இணைப்பு
மத்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள முக்கிய அடையாள ஆவணமான ஆதார் அட்டைகள் பல்வேறு சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, வங்கி கணக்கு துவங்குவது முதல் பில் செலுத்தல் வரைக்கும் இந்த ஆதார் அட்டைகள் அவசியமாகிறது. அந்த வகையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக மின் வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்திருந்தது. இதற்காக குறிப்பிட்ட நாட்கள் வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது.
IBM நிறுவன ஊழியர்களுக்கு ஷாக் – 3,900 பேர் பணிநீக்கம்!!
Follow our Twitter Page for More Latest News Updates
ஆனால், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு நுகர்வோர்கள் ஆர்வம் செலுத்தவில்லை. இதனை கருத்தில் கொண்டு, மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மின் கட்டணம் செலுத்துவதில் சிக்கல்களை சந்திக்கக்கூடும் என மின் வாரியம் எச்சரித்துள்ளது. அந்த வகையில், இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காத பயனர்கள் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் இந்த சேவைகளை முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.