தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்ய ‘ஆதார்’ கார்டு கட்டாயம் – அரசு அறிவிப்பு!
உடல் உறுப்பு தானம் செய்ய இனி ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதாரின் அவசியம் பற்றி ஆணையம் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
உடல் உறுப்பு தானம்:
இன்றைய கால கட்டத்தில் ஆதார் முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. ஆதார் அட்டையானது குடிமக்களின் புகைப்படம், முகவரி, கைரேகை முதலியனவற்றை கொண்டுள்ளது. இந்திய குடிமகனின் அடையாள அட்டையாக ஆதார் அட்டை கருதப்படுகிறது. ஆதார் எண்ணானது தற்போது வங்கிகள் முதல் ரேஷன் அட்டை வரை அனைத்திலும் இணைக்கப்பட்டுள்ள முக்கிய ஆவணமாகும். இத்துணை முக்கியத்துவம் வாய்ந்த ஆதாரனது உடல் உறுப்பு தானம் செய்ய இனி கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நவ.20ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவில் தொடர்ந்து 6 முறை முதல் இடத்தை பிடித்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தற்போது இளைஞர்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகமாக இருப்பதன் காரணமாக ஏராளமானோர் தாமாக முன்வந்து உடல் உறுப்புகளை தானம் செய்கின்றனர். இதனை தொடர்ந்து உடல் உறுப்புகளை கொடையாக அளிப்பதற்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் முறையும் கொண்டு வரப்பட்டது. மேலும் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புபவர்கள் தானாக பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 16.02 ரூபாய் குறைப்பு – மாநில அரசு அறிவிப்பு!
தற்போது உடல் உறுப்பு தானமாக பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் கட்டாயமாக்கப்படத்தை தொடர்ந்து அரசிதழில் கூறப்பட்டதாவது, உறுப்பு மாற்று அறுவையை சிகிச்சைக்காக பதிவு செய்வோர், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான நோயாளியை மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றுதல், உடல் உறுப்பு தானம் செய்ய முன் வருவோர், ஆதார் எண் அடிப்படையில் அத்தகைய சேவையை பெறலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் பொது மக்களுக்கு ஆதாரின் அவசியம் பற்றி ஆணையம் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.