தமிழகத்தில் நவ.20ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பினை பெறுவதற்கான அரசின் வேலைவாய்ப்பு முகாம் பற்றி அறிவித்துள்ளார். மேலும் இந்த முகாம் நவம்பர் 20ம் தேதி அன்று நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் அரசு துறைகளில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறுபவர்கள் வேலைவாய்ப்பினை பெறுவார்கள். மேலும் தங்கள் கல்வித்தகுதியை பதிவு செய்வதற்காக மாவட்டம் தோறும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அரசு சார்பில் நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம்கள் அங்கு நடத்தப்படும். இதேபோல், நம்பகமான தனியார் துறை வேலைவாய்ப்பினை இளைஞர்கள் பெற்றுக் கொள்ளும் நோக்கத்தில் தனியார் துறை அலுவலகங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் அரசு சார்பில் நடத்தப்படுகிறது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 16.02 ரூபாய் குறைப்பு – மாநில அரசு அறிவிப்பு!
தற்போது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நவம்பர் 20ம் தேதி நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. இது பற்றிய அறிவிப்பை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஷ்ரேயா பி.சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கான இந்த வேலைவாய்ப்பு முகாமில் மற்ற மாவட்டத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10,000 நிவாரணம் – அரசுக்கு கோரிக்கை!
இதற்கு 5 முதல் 12ம் வகுப்பு படித்தவர்கள், டிப்ளமோ, ஐடிஐ பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள் போன்ற கல்வித்தகுதி உடையவர்களுக்கான தகுதியின் அடிப்படையில் தனியார் துறையில் வாய்ப்பளிக்கப்பட உள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள இவர்கள் அனைவரும் கல்வி சான்றிதழ், சுயவிவரம், ஆதார் அட்டை நகல் போன்ற தேவையான அனைத்து ஆவணங்களையும் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இம்முகாமை பற்றிய மேலும் அதிக விவரங்களை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் 04286 – 222260 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.