நிதி சேவைகளில் இருந்து விலகும் முக்கிய நிறுவனம் – வெளியான ஷாக்கிங் தகவல்!
Xiaomi நிறுவனம் தனது நிதி சேவைகளை இந்தியாவில் இருந்து நீக்கிக்கொள்வதாக அறிவித்துள்ளது. இதற்கான காரணம் குறித்து அந்நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Xiaomi அறிவிப்பு:
Xiaomi நிறுவனம் சீன நாட்டை சேர்ந்த ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனமாக உள்ளது. தற்போது ஸ்மார்ட்போன் தயாரிப்பை தவிர மற்ற வணிக செயல்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் முன்னதாக 2019ம் ஆண்டு தனிநபர்களுக்கான கடன் வழங்கும் தளமான Mi Pay ஐ அறிமுகப்படுத்தியது. இதன்பிறகு, Mi கிரெடிட் என்ற கடன் வழங்குவதற்கான online curated தளத்தையும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்தது.
SBI Clerk தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – இன்று வெளியீடு!
Exams Daily Mobile App Download
இந்த கடன் வழங்கும் நிதி சேவைகளின் மூலம் இதுவரை இந்தியாவில் Xiaomi நிறுவனம் ரூ.125 கோடி வரையிலான கடன்களை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், Xiaomi நிறுவனத்தின் இந்திய செய்தி தொடர்பாளர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, Xiaomi நிறுவனம் தனது நிதி சேவைகளை இந்தியாவில் இருந்து விலக்க உள்ளது. நிறுவனத்தின் முக்கிய வணிக சேவைகளில் கவனம் செலுத்த உள்ளதால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.