மாணவர்களுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு – ஜாலியா வானில் பறக்கலாம்!
10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதலிடம் பெற்ற 125 மாணவர்களுக்கு சத்தீஸ்கர் அரசு புதுமையான பரிசு ஒன்றை வழங்கியுள்ளது. இந்த வாய்ப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜாக்பாட் வாய்ப்பு:
மத்திய, மாநில அரசுகளின் கல்வி வாரியத்தின் படி ஆண்டு தோறும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகிறது. பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் முயற்சியை பாராட்டும் வகையிலும் உயர்கல்விக்கான முன்னுரிமை, உதவித்தொகை மற்றும் பலவிதமான பரிசுகளையும் வழங்கி வருவது வழக்கமான செயல் தான். ஆனால், இந்த செயல்பாடுகளில் முற்றிலும் புதிய முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆதார் அப்டேட் கட்டுப்பாடுகள் – எதற்கெல்லாம் தெரியுமா? விவரம் இதோ!
அதாவது, சத்தீஸ்கரின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 125 மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர். தேர்வுக்கு முன்னதாகவே, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதலிடம் பெற்றவர்கள் அவர்களின் சாதனையைக் கொண்டாட ஹெலிகாப்டர் சவாரிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அறிவித்தார். மாநில அரசு இதுபோன்ற முயற்சியை மேற்கொள்வது இதுவே முதல் முறை ஆகும்.
Exams Daily Mobile App Download
அரசு அறிவித்த படி, தற்போது இந்த மாணவர்களை ஹெலிகாப்டர் சவாரிக்கு அழைத்து சென்றுள்ளது. இதனால் மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து மாணவர் ஒருவர், எங்களின் கடின உழைப்புக்கு வெகுமதி அளிக்கும் வகையில் அமைந்த பயணம், மேலும் சிறப்பாக வாழ்க்கையில் செயல்பட ஊக்கமளிக்கிறது என்று கூறியுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்