2017-18 கல்வியாண்டு மாணவர்களுக்கான இலவச மடிக்கணினிகள் – பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவு!!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச மடிக்கணினி வழங்கப்படுகிறது. 2017-18 ஆம் ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை என புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த காவுதீன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலவச மடிக்கணினி திட்டம்:
தமிழக அரசு பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் தொழிநுட்ப வளர்ச்சிக்காக ஒவ்வொரு ஆண்டும் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதற்காக அரசு சார்பில் ரூ.912 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழக பள்ளிகளில் 9.12 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரவாமல் இருக்க கடைபிடிக்க வேண்டியவை – மருத்துவர் அறிவுரை!!
ஆனால் 2017-18 ஆம் ஆண்டுக்கான மடிக்கணினி மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை என புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த காவுதின் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தற்போது கொரோனா காலம் என்பதால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே பாடங்களை கற்று வருகின்றனர். ஆனால் 2017-18 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் இலவச மடிக்கணினி வழங்காததால் அவர்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – அமைச்சர் விளக்கம்!!
இதையடுத்து 2020 ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையில் 2018-19 முதல் 2019-20 வரை கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு மட்டும் இலவச மடிக்கணினி வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் 2017-18 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு இன்னும் வழங்கப்படாததால் அவர்களுக்கு விரைவில் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனு குறித்து இன்று நடைபெற்ற விசாரணையில், இந்த வழக்கு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்