பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரவாமல் இருக்க கடைபிடிக்க வேண்டியவை – மருத்துவர் அறிவுரை!!
தமிழகத்தில் பள்ளிகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 ஆம் தேதி முதல் திறக்கப்பட்ட நிலையில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 8 ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு கொரோனா பரவாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் பற்றி தொற்றுநோயியல் மருத்துவர் சுரேஷ்குமார் சில வழிகாட்டுதல்களை கூறியுள்ளார்.
கட்டுப்பாட்டு வழிமுறைகள்:
தமிழகத்தில் பள்ளிகள் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனா தாக்கம் தற்போது குறைந்து வருவதால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்டமாக வகுப்புகள் கடந்த 19 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன. 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் வருகிற பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி – முதல்வர் அறிக்கை!!
இந்நிலையில் பள்ளிகளில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து தொற்றுநோயியல் மருத்துவர் சுரேஷ்குமார் கூறியுள்ளது,
1.சமூக விலகலை மாணவர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பள்ளிகளில் உணவு இடைவேளையில் மாணவர்கள் உணவு பரிமாறி கொள்வதை தவிர்க்க வேண்டும்.
2. மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது பொது போக்குவரத்து வாகனங்களை பய்னபடுத்தாமல் தனி சைக்கிள் அல்லது பெற்றோர்களுடன் பள்ளிக்கு வரலாம்.
3. சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
பள்ளி மாணவர்கள் தயாரித்த 100 செயற்கைகோள்கள் – பிப்ரவரி 7ம் தேதி விண்ணில் ஏவ திட்டம்!!
4. வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினருக்கு சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தாலும் ஆசிரியர்களிடம் தெரிவித்து பின்னர் விடுமுறை எடுத்துக்கொள்ள வேண்டும்.
5. பள்ளிகளில் மாணவர்கள் குறிப்பிட்ட நேர இடைவெளியில் கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவுதல், சானிடைசர் பயன்படுத்த வேண்டும்.
6. மாணவர்கள் காட்டாயமாக சுகாதாரமான முகக்கவசம் அணிய வேண்டும். பள்ளி நேரங்களில் முகக்கவசங்களை கழட்டி வைப்பது, இறக்கி விடுவது, கீழே வைப்பது போன்ற செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும்.
பாரதிதாசன் பல்கலை துணை வேந்தராக பேராசிரியர் செல்வம் நியமனம் – கவர்னர் உத்தரவு!!
7. அவ்வாறு முகக்கவசம் அணியும் போது மாணவர்களுக்கு எதாவது அசோகாரியம் ஏற்பட்டால் மாணவர்கள் அவர்களுக்கு ஏற்ற முகக்கவசம் தேர்வு செய்து அணிய வேண்டும்.
8. நீண்ட நேரமாக முகக்கவசம் அணிந்து இருந்தால், கூட்டம் இல்லாத இடங்களுக்கு சென்று நீண்ட மூச்சு விட்டு பின் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.
9. பள்ளி நேரம் முடிந்த பின் வீட்டுக்கு சென்று குளிக்க வேண்டும். முகக்கவசம் மற்றும் பள்ளி சீருடைகளை வெந்நீரில் ஊறவைத்து துவைக்க வேண்டும்.
10. வீடுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் முகக்கவசத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தனித்தனியாக முகக்கவசம் வைத்துக்கொள்ள வேண்டும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்