தமிழகத்தில் பொறியியல் அரியர் தேர்வுகளை நடத்த தயார் ?! – AICTEக்கு கடிதம்
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பயிலும் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய தொழில்நுட்ப குழுமம் (AICTE) சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் அதனை ஏற்று தமிழக அரசு சார்பில் பதில் கடிதம் அனுப்பப்பட்டதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் இதற்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் மறுப்பு தெரிவித்து உள்ளார்.
அரியர் தேர்வுகள் ரத்து :
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததால் தொடர்ந்து இறுதிப்பருவ தேர்வுகளை தவிர, பிற செமஸ்டர் தேர்வுகள் மட்டுமின்றி அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தி உள்ள மாணவர்களுக்கும் சேர்த்து தேர்வுகளை ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டது.
ஆனால், தமிழக அரசின் இந்த உத்தரவினை எதிர்த்து அகில இந்திய தொழில்நுட்ப குழுமம் (AICTE) சார்பில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில் அரியர் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கினால் பல்கலைக்கழக அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டு இருந்தது.
பள்ளிகள் திறப்பு எப்போது ? – அதிகாரபூர்வமாக அறிவித்த மத்திய அரசு
AICTEக்கு கடிதம் – அமைச்சர் மறுப்பு !
இந்நிலையில் அரியர் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்த தயார் என தமிழக அரசு பதில் கடிதம் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், AICTEயிற்கு எந்த கடிதமும் எழுதவில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறுவதால் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்ற அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் மாணவர்கள் உள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்