மக்களின் அடிப்படை அடையாள ஆவணமான ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைப்பது கட்டாயம் ஆகும். இந்நிலையில் யாரெல்லாம் பான் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டியதில்லை என இந்த பதிவில் பார்க்கலாம்.
பான் ஆதார் இணைப்பு
இந்திய குடிமக்களுக்கு முக்கியமான ஆவணமாக ஆதார் அட்டை இருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசு பான் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதை கட்டாயமாக்கி உள்ளது. ஆனால் சிலர் பான் கார்டை ஆதாருடன் இணைக்க தேவை இல்லை. யாரெல்லாம் இணைக்க தேவை இல்லை என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அதாவது 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆதாருடன் பான் கார்டை இணைக்க தேவை இல்லை.
அதே போல வருமான வரிச் சட்டத்தின்படி, குடியுரிமை இல்லாதவர்கள் அல்லது இந்தியக் குடியுரிமை இல்லாதவர்களும் பான் கார்டை இணைக்கத் தேவையில்லை. மற்ற அனைவரும் பான் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும். இல்லை என்றால் அவர்களின் பான் கார்டு ரத்து செய்யப்படும் என அரசு எச்சரித்துள்ளது. அது மட்டுமில்லாமல் அவர்கள் எந்தவித நிதி பரிவர்த்தனைகளை செய்ய முடியாது.