விரலில் ‘மை’ இருந்தால் தேர்வு எழுத அனுமதி இல்லை – வதந்திக்கு முற்றுப்புள்ளி!
தேர்தலின் பொது விலைகளில் வைக்கப்படும் மை இருந்தால் தேர்வு எழுத அனுமதி இல்லை என பரவி வந்த செய்துக்கு முற்றுப்புள்ளி வைத்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு எழுத அனுமதி:
தமிழகத்தில் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஆனது தெரிவித்துள்ளது. தற்போது தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலின் பொது வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு கை விரலில் மை வைப்பது முக்கியமான ஒன்றாகும். விரலில் மை வைத்து போட்டித் தேர்வை எழுத வரும் தேர்வர்கள் தேர்வு கூடங்களில் நுழைய தடை விதிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) கூறியுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.
பொதுமக்கள் கவனத்திற்கு.. ரூ. 500க்கு சிலிண்டர் விற்பனை – சூடுபிடிக்கும் தேர்தல் களம்!
இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை. எனவே இதுபோன்ற அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல் எதையும் தேசிய தேர்வு முகமை வெளியிடவில்லை என்றும் இந்த வதந்திகளுக்கு மாணவர்கள் செவிசாய்க்க வேண்டாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே தேர்வர்கள் தங்களுடைய வாக்குரிமையை செலுத்தலாம். வாக்களிப்பது அவர்களின் தேர்வுக்கான தகுதியை எந்தவிதத்திலும் பாதிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.