மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு, ராம நவமியை முன்னிட்டு ஏப்ரல் 17ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.
பொது விடுமுறை:
கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் ராம நவமி ஊர்வலம் தொடர்பாக வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது. கடந்த ஆண்டு, ராம நவமி ஊர்வலங்கள் தொடர்பாக குறைந்தபட்சம் மூன்று இடங்களில் வன்முறை நடைபெற்றது. கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தற்போது இது குறித்து விசாரித்து வருகிறது.
எனவே இதனை தடுக்கும் விதமாக, அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து, அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அவற்றின் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் ஏப்ரல் 17 அன்று மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு, ராம நவமி அன்று அரசு பொது விடுமுறை அறிவித்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.