தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளை (ஜூன் 10) வேலைவாய்ப்பு முகாம் – வேலை தேடுவோர் கவனத்திற்கு!
தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் நாளை (ஜூன் 10) வேலைவாய்ப்பு முகாம் நடத்த இருக்கின்றனர்.
வேலைவாய்ப்பு முகாம்
தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி அதன் மூலம் ஆயிரக்கணக்கில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் அரசு திறன் மேம்பாட்டு நிறுவனம், நான் முதல்வன் இயக்கமும் இணைந்து மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாமை நாளை (ஜூன் 10) நடத்த இருக்கிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு – 8 வது ஊதியக்குழு அமல்!
இந்த முகாம் தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியில் காலை 9 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் 50 க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் இந்த முகாமில் தேனி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள விருப்பம் இருப்பவர்கள் கல்லூரியின் வேலைவாய்ப்பு பிரிவு அலுவலரை 90951 00259 தொலைபேசி எண்ணிலும், நான்முதல்வன் திட்ட மேலாளர் கல்யாண் குமாரை 99528 78418 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம் என அந்த கல்லூரி முதல்வர் சித்ரா தெரிவித்துள்ளார்.