தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டல் குறித்த அறிவிப்பு – நாளை (மே 31) முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியான நிலையில் மறுகூட்டலுக்கு நாளை (மே 30) முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வு துறை தெரிவித்துள்ளது.
மறுகூட்டல்:
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2021-22 ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டு மே 8 ஆம் தேதி முடிவுகள் வெளியானது. தேர்வு எழுதிய மாணவர்களில் 94.03% பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் துணைத்தேர்வு ஜூன் 19 ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் ஜூன் 24 வரை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
LIC ADO Mains தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண்ணில் ஏதாவது சந்தேகம் இருந்தால் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை (மே 31) முதல் விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் விண்ணப்பித்த பாடங்களுக்கு பதிவெண், பிறந்த தேதியை பதிவுசெய்து விடைத்தாள் நகல்களை இன்று ( மே 30) முதல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் மறுமதிப்பீடுக்கு பாடம் ஒன்றுக்கு ரூ. 500 கட்டணமாக செலுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
Exams Daily Mobile App Download