இந்தியாவில் புதிதாக 2 ஆப்பிள் ஸ்டோர்ஸ் திறப்பு – CEO டிம் குக் வருகை!
ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக் அடுத்த வாரம் இரண்டு புதிய ஸ்டோர்களை திறப்பதற்கு இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். இந்த வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
ஆப்பிள் ஸ்டோர்:
ஆப்பிள் நிறுவனம் தனது Foxconn ஆலையை சீனாவில் மூடிவிட்டது. அங்கு கொரோனாவின் அதீத தாக்கம் காரணமாக விதிக்கப்பட்டிருந்த பூஜ்ஜிய கோவிட் கொள்கையின் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதற்கு பதிலாக இந்தியாவில் தனது ஆலைகளை திறக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது.
தமிழகத்தில் மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் – அரசிடம் வலுக்கும் கோரிக்கை!
இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக் அடுத்த வாரம் இந்தியாவிற்கு வர உள்ளார். நிறுவனத்தின் சொந்த ஆப்பிள் ஸ்டோர்கள் முறையே மும்பையின் பாந்த்ரா குர்லா காம்ப்ளெக்ஸ் மாலில் ஏப்ரல் 18ம் தேதி மற்றும், ஏப்ரல் 20ம் தேதி டெல்லியிலும் திறப்பதற்காக தான் இந்த வருகை உள்ளது. உலகின் 2 வது பெரிய ஸ்மார்ட்போன்களின் சந்தையாக இந்தியா உள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்த 2 ஸ்டார்களுக்கான உற்பத்தி பணிகள் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. மேலும், இந்த வருகையின் போது டிம் குக் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download