![எல்லை தாண்டி சண்டையிடும் ராதிகா, தற்கொலை முயற்சி செய்யும் இனியா - எல்லை தாண்டி சண்டையிடும் ராதிகா, தற்கொலை முயற்சி செய்யும் இனியா -](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2023/03/எல்லை-தாண்டி-சண்டையிடும்-ராதிகா.jpg)
எல்லை தாண்டி சண்டையிடும் ராதிகா, தற்கொலை முயற்சி செய்யும் இனியா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியாவிற்கும் ராதிகாவிற்கும் இடையே அடிக்கடி சண்டை வர, இனியா ராதிகா திட்டுவது தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள இருக்கிறார். இதெல்லாம் அடுத்து வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் பல திருப்பங்கள் வந்த வண்ணம் இருக்கிறது. பாக்கியாவை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என ராதிகா கேன்டீனில் பல டாஸ்க்குகளை கொடுக்கிறார். அதை நல்லபடியாக செய்து முடிக்க பாக்கியாவிற்கு பழனி உதவியாக இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ராதிகாவிற்கும் இனியாவிற்கும் இடையே அடிக்கடி முட்டிக் கொள்கிறது. அதனால் இனியா மிகுந்த மன வேதனையில் இருக்கிறார்.
இன்றைய எபிசோடில் இனியா டியூசன் முடித்துவிட்டு லேட்டாக வீட்டிற்கு வருகிறார். அப்போது ராதிகா ஏன் லேட் என கேட்க, இனியா லேட்டாகிவிட்டது என சொல்கிறார். இனிமேல் நீ சைக்கிளில் டியூசன் போக வேண்டாம் என ராதிகா செல்ல, ஏன் என இனியா கேட்கிறார். நீ அந்த பையனுடன் பேசிக் கொண்டே செல்வாய் அதனால் வேண்டாம் என ராதிகா சொல்ல, இதனால் இனியாவிற்கு மிகுந்த மன வேதனை ஏற்படுகிறது
Follow our Twitter Page for More Latest News Updates
இனியா ராதிகாவின் திட்டுகளை வாங்க முடியாமல் வருத்தப்பட, வேறு வழி இல்லாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. இனியா தற்கொலை செய்ய முயற்சி செய்வதை அறிந்து பாக்கியா வருத்தப்படுகிறார். இதனால் இனிமேல் இனியா என்னுடன் தான் இருப்பாள் என சொல்லி இனியாவை தன்னுடன் அழைத்து செல்வாரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. மேலும் இனியாவை பிரிந்து கோபி கஷ்டப்படுவது அடுத்தகட்ட கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.