இரட்டிப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் – முழு விவரம் உள்ளே!
ரத்லாம் கோட்டத்தின் கர்ச்சா – பர்லாய் நிலையங்களுக்கு இடையே உள்ள இரட்டிப்புப் பணிகள் காரணமாக பல்வேறு ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்படுவதாக மேற்கு ரயில்வே துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரயில் சேவையில் மாற்றம்:
நாட்டில் பொது போக்குவரத்துகளில் ஒன்றான ரயில் போக்குவரத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் மேற்கு ரயில்வே ஆனது ரத்லாம் கோட்டத்தின் கர்ச்சா – பர்லாய் நிலையங்களுக்கு இடையே உள்ள இரட்டிப்புப் பணிகள் காரணமாக மாற்றப்பட்டுள்ள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 17ம் தேதி அன்று கொச்சுவேலியில் இருந்து 11.10 மணிக்கு புறப்படும் கொச்சுவேலி – இந்தூர் ஜேஎன் வாராந்திர சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு – கொசு தொல்லைக்கு புகார் அளிக்கும் வசதி!!
இதே போல் இந்தூரிலிருந்து வருகிற 21ம் தேதி அன்று 21.40 மணிக்கு புறப்படும் இந்தூர் – கொச்சுவேலி வாராந்திர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்ட்டுள்ளது. மேலும் கொச்சுவேலியில் இருந்து வருகிற 18ம் தேதி அன்று காலை 06.35 மணிக்கு கொச்சுவேலி – இந்தூர் வாராந்திர அதிவிரைவு விரைவு ரயில் புறப்பட்டு, உஜ்ஜைன், ஃபதேஹாபாத் சந்திரவதி கஞ்ச், இந்தூர் ஆகியவை வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இதே போல் இந்தூரில் இருந்து வருகிற பிப்ரவரி 20 அன்று இந்தூர் – கொச்சுவேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் 16.45 மணிக்குப் புறப்பட்டு இந்தூர், ஃபதேஹாபாத் சந்திரவதிகஞ்ச், உஜ்ஜைன் ஆகியவற்றின் வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அஜ்மீரிலிருந்து அஜ்மீர் – ராமேஸ்வரம் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற பிப்ரவரி 18 அன்று 20.20 மணிக்குப் புறப்பட்டு ரத்லம், ஃபதேஹாபாத் சந்திரவதிகஞ்ச், உஜ்ஜைன் ஆகியவற்றின் வழியாக இயக்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download