சென்னையில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு – கொசு தொல்லைக்கு புகார் அளிக்கும் வசதி!!
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது. அதனால் சுகாதாரக்கேடு அதிகமாக இருக்கிறது. இதனை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் பொதுமக்கள் கொசு தொல்லை அதிகமாக இருந்தால் 1913 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு அறிவிப்பு:
தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட சென்னையில் மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது. மேலும் நாட்டில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் பல சென்னையில் தான் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை மாநகரம் முழுவதும் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றி நகரை தூய்மையாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பருவமழை முடிந்த பின் கூட பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. அதனால் அங்கே கொசு தொல்லை அதிகமாக இருப்பதாக புகார் வந்துள்ளது.
பள்ளிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை – மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு… குஷியில் மாணவர்கள்!!
இந்த புகாரை அடுத்து சென்னையில் கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் கொசு தொல்லை அதிகமாக இருந்தால் 1913 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் தீவிர கொசு ஒழிப்பு பணியின் ஒரு பகுதியாக 2,919 தெருக்களில் கொசு புகை மற்றும் மருந்துகள் வாகனங்கள் மற்றும் கையால் இயக்கும் இயந்திரங்கள் மூலம் பரப்பப்பட்டு கொசு ஒழிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Exams Daily Mobile App Download