தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – அரசு தேர்வு இயக்குனர் புதிய அறிவிப்பு!!
தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களின் பெயர் பட்டியலில் எதாவது திருத்தங்கள் இருந்தால் அதனை பிப் 3 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம் என அரசுத் தேர்வு இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பொதுத்தேர்வு:
தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளில் பொதுத்தேர்வு நடைபெறுவதில் பல சிக்கல் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு பொதுதேர்வானது திட்டமிட்டபடி நடைபெற இருக்கிறது. மேலும் 10, 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதியும் வெளியாகி இருக்கிறது. அதன் படி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரையும், 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரையும் நடைபெற இருக்கிறது.
வரி செலுத்துபவர்கள் இந்த ஆண்டில் இவ்வளவு தொகை சேமிக்கலாமா? வெளியான சூப்பர் தகவல்!
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிற்கான 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.5 லட்சம் மாணவர்கள் எழுத இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்களின் பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களின் பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அதனை பள்ளி தலைமை ஆசிரியர்கள் வருகிற பிப். 3 ஆம் தேதி முதல் பிப். 10 ஆம் தேதி வரை செய்யலாம் என அரசு தேர்வு இயக்குனர் தற்போது வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.