தமிழக முதல்வரின் சூப்பர் உத்தரவு… அகவிலைப்படி உயர்வு, ரூ. 3000 கருணைக்கொடை – திருக்கோயில் பணியாளர்கள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருக்கோயில் பணியாளர்களுக்கு தமிழக அரசு அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. அத்துடன் கருணைக்கொடை வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அகவிலைப்படி:
இந்தியாவில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகவிலைப்படியை 38% ஆக உயர்த்தி அறிவித்தது. மத்திய அரசை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தியது. இந்த நேரத்தில் தமிழக அரசு ஊழியர்கள் தங்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
வாட்ஸ் அப்பில் இனி Caption உடன் Forward Message அனுப்பலாம் – அட்டகாசமான அம்சம் அறிமுகம்!!
Follow our Instagram for more Latest Updates
இந்தக் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஜனவரி 15 ஆம் தேதி வரவுள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 34 சதவீதத்தில் இருந்து 38% ஆக அதிகரித்துள்ளது. இதனால் ஏராளமான அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள். அதனைத் தொடர்ந்து தற்போது திருக்கோயில் உள்ள பணியாளர்களுக்கும் அகவிலைப்படி 38% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் 10,000 திருக்கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கருணைக்கொடையாக ரூ. 3000 வழங்கப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பால் திருக்கோயில் பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.