நகைப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. அதிரடி விலை ஏற்றத்தை கண்ட ஆபரண தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!
இன்றைய நிலவரப்படி ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.312 உயர்ந்து ரூ.42,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து அதிகரிக்கும் தங்கத்தின் விலையால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தங்கம் விலை:
கடந்த மாதத்தில் ஒரு சில நாட்கள் சற்று குறைந்த தங்கம் விலை, இந்த வருட தொடக்கத்தின் முதலே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக புத்தாண்டின் முதல் நாள் கூட நகையின் விலை உயர்ந்தது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பங்கு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் மாற்றத்தை சந்திக்கிறது. இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி தங்கம் சவரனுக்கு ரூ.312 உயர்ந்து உள்ளது.
சீனாவில் இன்று முதல் கட்டுப்பாடுகள் தளர்வு – வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி!
அதாவது ஒரு சவரன் ஆபரணதங்கம் நேற்று 41,768க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று ஒரு சவரன் ரூ.312 உயர்ந்து ரூ.42,080க்கு விற்பனையாகிறது. அதே சமயம் ஒரு கிராம் தங்கம் ரூ.39 உயர்ந்து ரூ.5,260க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.50 காசுகள் உயர்ந்து ரூ.74.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கம் விலை உயர்வை கண்டு வருவதால் நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் மத்தியில் கலக்கம் நிலவி வருகிறது.