பொங்கல் பரிசு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு – இந்த பொருளையும் சேர்த்து வழங்க கோரிக்கை!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு சில நாட்களுக்கு முன் பொங்கலை முன்னிட்டு பரிசு தொகுப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இது சம்மந்தப்பட்ட வழக்கு சென்னை உயர்நிதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு:
தமிழகத்தில் அரசு மக்களின் இன்ப, துன்பங்களில் கலந்து கொள்ளும் பொருட்டு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேபோல், பொங்கல் பண்டிகையை மக்கள் எந்தவித ஏற்ற தாழ்வுகளும் இல்லாமல் கொண்டாட வேண்டும் என்பதற்காக பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. இந்நிலையில், வரும் பொங்கல் பண்டிகைக்கு அரசு ரூ.1,000 தொகையை நேரடியாக வங்கி கணக்கிலும், தலா 1 கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரையை ரேஷன் கடைகளின் மூலமும் வழங்க உள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில், நேற்று வெளியான அரசு அறிவிப்பில், டிசம்பர் 27ம் தேதியான இன்று முதல் வீடு வீடாக ரேஷன் கடை ஊழியர்களின் மூலம் பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் அளிக்கும் பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சொன்னது போல், மாநிலத்தின் எந்த பகுதியிலும் இன்று டோக்கன் வழங்கும் பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் மக்கள் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து குழப்பம் அடைந்தனர்.
தமிழக அரசின் உயர்த்தப்பட்ட சொத்து வரி செல்லும் – உயர்நீதி மன்றம் உத்தரவு!
Exams Daily Mobile App Download
இதனால், அமைச்சர் பெரிய கருப்பன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் நடந்த சிறிய தவறுகள் மிகவும் அதிக அளவில் பெரியதாக்கப்பட்டு விட்டது. இதனால் இந்த முறை அரசு கரும்பு கொள்முதல் செய்யவில்லை என்றும், இன்று துவங்க இருந்த பொங்கல் தொகுப்பு டோக்கன் வழங்கும் பணிகள் இன்னும் தொடங்கவில்லை என்றும், மக்கள் இதனால் குழப்பமடைய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடலூரை சேர்ந்த விவசாயி ராதா கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு சேர்த்து வழங்க கோரி வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.