பாக்கியாவிற்கு எதிராக ராதிகாவை தேர்தலில் நிற்க வைக்கும் கோபி.. மக்களின் ஆதரவு யாருக்கு? இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி பாக்கியாவிற்கு எதிராக ராதிகாவை தேர்தலில் நிற்க சொல்கிறார். உடனே ராதிகா முதலில் முடியாது என சொல்ல, ஆனால் கோபி எனக்காக நிற்க வேண்டும் என சொல்கிறார். பாக்கியாவும், ராதிகாவும் தேர்தலில் நிற்க விண்ணப்பிக்கின்றனர்.
பாக்கியலட்சுமி
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி பாக்கியாவிற்கு போட்டியாக ராதிகாவை தேர்தலில் நிற்க சொல்கிறார். ஆனால் ராதிகா முடியாது என சொல்கிறார். இதெல்லாம் நமக்கு தேவை இல்லாதது என ராதிகா சொல்கிறார். ஆனால் கோபி நீ கண்டிப்பாக நிற்க வேண்டும் என சொல்ல, உடனே ராதிகா நான் இந்த ஏரியாவிற்கு புதியது அதனால் எனக்கு யாரும் ஓட்டு போடமாட்டார்கள் என சொல்கிறார். ஆனால் கோபி என்னை எல்லாருக்கும் தெரியும் அதனால் அவர்கள் ஓட்டு போடுவார்கள் என சொல்கிறார்.
Follow our Instagram for more Latest Updates
மறுநாள் பழைய செகரட்டரி தலைமையில் தேர்தலில் நிற்பவர்கள் நாமினேட் செய்கின்றனர். அப்போது பழைய செகரட்டரி என் மனைவி இந்த தேர்தலில் நிற்கவில்லை என சொல்கிறார். உடனே செல்வி அப்போ யாரும் போட்டி இல்லை என் அக்காவை வெற்றி பெற்றதாக சொல்ல சொல்கிறார். ஆனால் அந்த பழைய செகரட்டரி இன்னொருத்தர் வருவதாக சொல்ல, அப்போது கோபி ராதிகாவுடன் வருகிறார். அனைவரும் அதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். பின் பழைய செகரட்டரி விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய சொல்கிறார்.
பாக்கியா கணவர் பெயரில் எதுவும் எழுதாமல் இருக்க பழைய செகரட்டரி அதை கிண்டல் செய்கிறார். அதில் எதாவது எழுத வேண்டும் இல்லை என்றால் அப்பா பெயர் எழுத வேண்டும் என சொல்ல, உடனே பாக்கியா ராமமூர்த்தியை அப்பா பெயர் என எழுதுகிறார். கோபி அதை பார்த்து நக்கலாக சிரிக்கிறார். அதன் பின் ராதிகாவை எழுத சொல்ல, கணவர் பெயரில் கோபி என எழுதுகிறார். பின் பாக்கியாவிற்கு ஆதரவாக ராமமூர்த்தி பேசுகிறார். இத்தனை ஆண்டுகளாக குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் பாக்கியா இந்த ஏரியாவை நன்றாக பார்த்துக் கொள்வார் என ராமமூர்த்தி சொல்கிறார்.
தமிழகத்தில் இன்று (டிச. 10) 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகங்கள் அறிக்கை!
பின் ராதிகாவுக்கு ஆதரவாக கோபி பேசுகிறார். நான் பெரிய படிப்பு படித்துவிட்டு சொந்தமாக தொழில் செய்கிறேன் எல்லாருக்கும் என்னை தெரியும் என சொல்ல, உடனே அக்கம் பக்கத்து பெண்கள் இவர் காரில் போனது மட்டும் தான் தெரியும், மத்தபடி பாக்கியாவின் கணவர் என்பது தான் தெரியும் என பேசிக் கொள்கின்றனர். பின் ராதிகாவை பேச சொல்ல, அவர் பெரிய கம்பெனியில் வேலை செய்வதாகவும், 1000 பேர் அவருக்கு கீழ் இருப்பதாக சொல்கிறார். வீட்டை கவனிப்பது எல்லாரும் செய்வது ஆனால் ஒரு நிறுவனத்தை கவனிக்க நிறைய படிக்க வேண்டும் என சொல்கிறார். ஒரு நிறுவனத்தை கவனிக்கும் நான் தான் இந்த ஏரியாவை நன்றாக பார்த்துக் கொள்ள முடியும் அதனால் கண்டிப்பாக எனக்கு வாக்கு செலுத்துங்கள் என சொல்ல, அது பாக்கியாவை குத்தி காட்டி பேசுவது போல இருக்கிறது. இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது