தமிழகத்தில் இன்று (டிச. 10) 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகங்கள் அறிக்கை!
தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல், பல மாவட்டங்களை புரட்டி போட்டு வருகிறது. அதன் காரணமாக இன்று (டிச.10) 13 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது புயலாக வலுப்பெற்று இருக்கிறது. இந்த புயலுக்கு “மாண்டஸ் புயல்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்த மாண்டஸ் புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னைக்கு 40 கி.மீ மேற்கு-தென்மேற்கில் நிலைகொண்டுள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates
அதனால் இன்றும் (டிச. 10) பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் 13 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக, அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இனி முழுவதும் WFH தான் .. அலுவலகத்திற்கு வர தேவையில்லை – மத்திய அரசின் அறிவிப்பு!
அதன் படி விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரம்
1.சென்னை
2. செங்கல்பட்டு
3. விழுப்புரம்
4.கடலூர்
5. திருவள்ளூர்
6. காஞ்சிபுரம்
7. வேலூர்
8. ராணிப்பேட்டை
9.தர்மபுரி
10. கிருஷ்ணகிரி
11. கள்ளக்குறிச்சி
12. நீலகிரி
13. திருவண்ணாமலை
14. சேலம்
15. திருப்பத்தூர்