மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு – நவ. 29 நேர்காணல்! விவரம் இதோ!
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டு வருகிறது. இது குறித்த முழு விவரத்தை இப்பதிவில் காண்போம்.
உதவி பேராசிரியர்:
தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. கடந்த 1990ம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல், சட்டம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகள் உள்ளது. இங்கிருந்து ஆண்டுதோறும் ஏராளமான மாணவர்கள் பட்டம் பெற்று வெளியேறி வருகின்றனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அத்துடன் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இதன் உறுப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இப்பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இது குறித்து மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்ட செய்தி குறிப்பில் விலங்கியல் துறை மற்றும் தொழில் திறன் பாடம் நடத்த பேராசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
ரூ.20,670 ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!!
Exams Daily Mobile App Download
இப்பணிக்கு M.sc in Food Processing மற்றும் Food Science Biotechnology, Microbiologe அத்துடன் Phd/Ucg/Net/TN-Set கல்வி தகுதியுடையவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள். இத்தகைய கல்வி தகுதியுடையவர்கள் வரும் 29ம் தேதி நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம். நேர்காணல் நவ.29ம் தேதி காலை பல்கலைக்கழக வளாகத்தில் காலை 10.30 மணிக்கு தொடங்கும். இந்த நேர்காணலுக்கு வருபவர்கள் தங்களின் சுய விவர குறிப்பு மற்றும் அசல் கல்வி சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும்.