தமிழக விவசாயிகள் கவனத்திற்கு – பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பயிர்கள் மழை நீரில் சேதமடைய வாய்ப்புள்ளது. அதனால் விவசாயிகள் முன்கூட்டியே பயிர் காப்பீடு செய்து கொள்ள வலியுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பயிர் காப்பீடு:
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் இருந்து வடகிழக்கு பருவ மழை கொட்டித் தீர்த்து வருகிறது. அதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் அதிக பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதனால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த தொடர் மழையினால் விவசாயம் செய்துள்ள பயிர்கள் சேதமடைய வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் முன் கூட்டியே பயிர் காப்பீடு செய்யுமாறு தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது. ஏற்கனவே இது குறித்து வெளியான அறிவிப்பில் சம்பா பருவ நெற்பயிர்களுக்கு வரும் 15ம் தேதி வரை காப்பீடு செய்யுமாறு அறிவிக்கப்பட்டது.
பென்சன் வாங்குவோர் கவனத்திற்கு – உயிர் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க புதிய வசதி அறிமுகம்!!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை, கடலுர் மாவட்டங்களை முதல்வர் முக ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான தேதியை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடு நவ.21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய ஏதுவாக நவ.19, 20 (சனி,ஞாயிறு) ஆகிய தினங்களில் பொது சேவை மையங்கள், வேளாண் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.