தமிழகத்தில் ஆட்டோ,டாக்ஸி, ஆம்னி பேருந்துகளின் பர்மிட் கட்டணம் உயர்வு – திரும்ப பெற வலுக்கும் கோரிக்கை!!
சென்னையில் ஆட்டோ டாக்ஸி ஆம்னி பேருந்துகளின் பர்மிட் கட்டணம் மற்றும் புதுப்பித்தலுக்கான கட்டணத்தை போக்குவரத்து துறை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
பர்மிட் கட்டணம்
தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின்படி ஆவணங்களுக்கு அனுமதி வழங்குதல், அனுமதிகளைப் புதுப்பித்தல் ஆகியவற்றிக்கான சேவை கட்டணங்களை உயர்த்த போக்குவரத்து துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதனால் ஆட்டோ, டாக்ஸி, தனியார் ஆம்னி பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கான பர்மிட், புதுப்பித்தல் கட்டணம் 177% வரை உயரக்கூடும். மேலும் ஏற்கனவே தமிழகத்தில் ஆட்டோ,டாக்ஸி, ஆம்னி ஆகியவற்றிற்கு அபராத கட்டணம், சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த கட்டண உயர்வு இத்துறை சார்ந்த தொழிலாளர்களை பெரிதும் பாதிக்கும்.
Exams Daily Mobile App Download
அதனால் பர்மிட் கட்டணம் மற்றும் புதுப்பித்தலுக்கான கட்டண உயர்வு திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க பொருளாளர் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் ஏற்கனவே டீசல், உதிரி பாகங்கள் விலை உயர்வு, இருக்கை மீதான வரி, சுங்க கட்டணம் ஆகியவற்றின் விலை உயர்வால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – உணவு பட்டியல் தொகுப்பு மாற்றம்… IRCTCக்கு அனுமதி!
Follow our Instagram for more Latest Updates
மேலும் தற்போது பர்மிட், புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ. 30 ஆயிரம் வரை செலுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் 2013ம் ஆண்டு மீட்டர் கட்டணத்தின்படியே பயணிகளிடம் தற்போது வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதனால் பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசு ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். அதன்பிறகு பர்மிட், புதுப்பித்தல் கட்டணங்களை உயர்த்த வேண்டும் எனவும் தற்போது இத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.