நீங்கள் பான் கார்டு அல்லது பே ஸ்லிப் இல்லாமல் தனி நபர் கடன் பெற வேண்டுமா? முழு விவரங்கள் இதோ!
தற்போது தனிநபர் கடன் பெறுவதற்கு பான் கார்டு அல்லது பே ஸ்லிப் கட்டாயமான ஒன்றாகும். இந்த இரு ஆவணங்கள் உதவியின்றி தனிநபர் கடன் பெறுவது எப்படி என்பது இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.
தனிநபர் கடன்
தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் பண வீக்கம் காரணமாக தனிநபர் தனது வருமானத்தை வைத்து மட்டும் வீடு, வாகனம் உள்ளிட்டவைகளை வாங்க முடிவதில்லை. அதனால் வீடு, வாகனம் உள்ளிட்டவற்றை வாங்க கடன்களை வாங்குகின்றனர். ஒரு நிறுவனத்திலோ அல்லது வங்கிகளிலோ கடன் வாங்குவது அவ்வளவு சுலபம் இல்லை. ஏனெனில் நீங்கள் கடனை திருப்பி செலுத்துவதற்கான தகுதிகள் பெற்றுள்ளீர்களா என்பதை தீர்மானித்த பிறகு உங்களுக்கு அதாவது தனி நபருக்கு கடன் வழங்கப்படுகிறது.
TNPSC Group 2 & 2 A தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!
மேலும் தனி நபர் கடன் பெறுவதற்கு அவர் தனது பான் கார்டு அல்லது பே ஸ்லிப் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். இப்போது இந்த இரண்டு ஆவணங்கள் இன்றி தனிநபர் கடன் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
Exams Daily Mobile App Download
Follow our Instagram for more Latest Updates
1. நீங்கள் ஏற்கனவே கடன் பெற்றிருந்தால் அக்கடனை உரிய தவணை காலத்திற்குள் செலுத்தி இருந்தால் கடன் வழங்கும் நிறுவனங்கள் உங்களுக்கு கடனை உறுதியாக வழங்கும்.
2. இதேபோன்று நீங்கள் கடனை திருப்பி செலுத்த தகுதியானவர் என்பதை உறுதிப்படுத்துவதற்கு உங்களின் சொத்து பத்திரங்களை ஈடாக வைத்தும் கடன் வாங்கிக் கொள்ளலாம்.
3. மேலும் உங்களுக்கு சாட்சி கையெழுத்திட யாரேனும் தயாராக இருப்பின் அவர் உதவியுடன் நீங்கள் கடன் தொகை பெற்றுக் கொள்ளலாம்.