பள்ளிகள் மீண்டும் திறப்பு.. கட்டுப்பாடுகள் தளர்வு – இயல்பு நிலையை நோக்கி திரும்பும் தேசிய தலைநகரம்!
டெல்லியில் காற்றின் தரம் மிக கடுமையான நிலையை அடைந்த காரணத்தால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
இயல்பு நிலை:
டெல்லியில் காற்று மாசுபாடு குறித்த பிரச்சனைகள் கடந்த சில வருடங்களாக எழுந்து வரும் நிலையில், நடப்பு ஆண்டில் நிலைமை கையை மீறி சென்று விட்டது. காற்றின் தரத்தை குறிப்பிடும் அளவீடு AQI உச்ச நிலையை அடைந்து சுவாசிப்பதற்கான காற்று மோசமான நிலையில் இருந்தது. இதனால் மக்களின் நலன் கருதி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன்படி, ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் 50% ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டனர்.
தமிழக மக்கள் நவ.10 கவனமா இருங்க.. மிக கனமழை அபாயம் ..வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், தற்போது டெல்லியில் காற்று மாசுப்பாடு சற்று குறைந்து இயல்பு நிலை திரும்ப தொடங்கியுள்ளது. இதனால் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு வரும் 9ம் தேதியான புதன்கிழமை முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும், 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வெளிப்புற நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 50% அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த WFH உத்தரவு நீக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.