சரியான முடிவு.. பாரதியை நிராகரித்த கண்ணம்மா.. நிர்கதியாய் விட்ட குடும்பம் – பரபரப்பான திருப்பங்கள்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், தற்போது பரபரப்பான திருப்பங்களுடன் கதை சென்று கொண்டிருக்கிறது. பாரதி வெண்பாவை திருமணம் செய்ய இருக்கும் போது ஏற்பட்ட திருப்பம் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில் பல சுவாரசியமான காட்சிகள் நடந்து வருகிறது. வெண்பா ரோஹித் திருமண ஏற்பாடுகள் நடக்க, ஆனால் வெண்பா எல்லார் கண்ணிலும் மண்ணை அள்ளி போட்டுவிட்டு பாரதியை திருமணம் செய்ய தப்பித்து செல்கிறார். இதற்கிடையே கண்ணம்மா சாந்தியை மிரட்டி வெண்பாவின் திட்டத்தை தெரிந்து கொள்கிறார். தாலி கட்டிய மனைவி நான் உயிரோடு இருக்கும் போது எப்படி பாரதி வெண்பா கழுத்தில் தாலி காட்டுகிறார் என பார்க்கிறேன் என கண்ணம்மா கோவமாக கிளம்பி செல்கிறார்.
Exams Daily Mobile App Download
இதற்கிடையே DNA முடிவுக்காக பாரதி காத்துக் கொண்டிருக்க ஆனால் வெண்பா வற்புறுத்தி பாரதியை தாலி கட்ட சொல்கிறார். இந்நிலையில் கண்ணம்மா, ரோஹித், ஷர்மிளா, சௌந்தர்யா என அனைவரும் வந்து திருமணத்தை தடுத்து நிறுத்துகின்றனர். பாரதியிடம் வெண்பாவை ஏன் திருமணம் செய்ய போகிறாய் என கேட்க, வெண்பாவை யாரோ கற்பழித்துவிட்டார்கள். அதனால் அவள் கர்ப்பமாக இருக்கிறாள். அவளுடைய குழந்தைக்கு சமூகத்தில் அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்பதால் தான் திருமணத்திற்கு சம்மதித்தேன் என சொல்ல, உடனே கண்ணம்மாவிற்கு பயங்கர கோவம் வருகிறது.
ஜோடி பொருத்தம் சூப்பர்.. வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட ஹன்சிகா.. குவியும் வாழ்த்துக்கள்!
Follow our Instagram for more Latest Updates
நீ பெற்ற குழந்தைகளை ஏற்றுக் கொள்ளமாட்டாய் யாரோ ஒருவரின் குழந்தைக்கு ஆதரவு கொடுக்க போகிறாயா என கண்ணம்மா கேட்க, ரோஹித் நான் தான் வெண்பா வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பா என உண்மையை சொல்கிறார். அதனால் ஷர்மிளா வெண்பா ரோஹித் திருமணத்தை நடத்த, அப்போது ஹேமாவும் லக்ஷ்மியும் வருகின்றனர். ஹேமா இனிமேல் நான் அம்மா கூட தான் இருப்பேன் என சொல்ல, கண்ணம்மாவும் பாரதியை ஏற்றுக் கொள்ளாமல் கிளம்புகிறார். அதனால் பாரதி நிர்கதியாக நிற்பது போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.