VIP-களுக்கு அடிச்சது ஜாக்பாட்.. அதிகரிக்க உள்ள பணி நியமனங்கள் .. ஆய்வு அறிக்கை வெளியீடு!
சமீப காலமாக நாடு முழுவதும் முக்கிய நிறுவனங்களில் பணி நீக்கம் செய்யப்படுவது அதிர்ச்சியை அளித்து வருகிறது. இந்நிலையில், ஆய்வு நிறுவனம் ஒன்று ஊழியர்கள் பணி நியமனம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஆய்வு அறிக்கை:
நிறுவனங்கள் எதிர்பாராத விதமாக தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருவதாக செய்திகளில் அடிக்கடி தகவல்கள் வெளியாகின்றது. நிறுவனத்தின் வருமானம் குறைந்துள்ளதாலும், செலவுகளை குறைக்க வேண்டிய நடவடிக்கையின் காரணமாக இந்த பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நிறுவனங்களின் சார்பாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் இனி வரும் காலங்களில் உலக அளவில் பொருளாதார மந்த நிலை நிலவும் என கூறப்படுகிறது.
57,000க்கும் மேற்பட்ட இந்தியர்களின் டிவிட்டர் கணக்கு ரத்து – இது தான் காரணம் நிறுவனம் விளக்கம்!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், டீம்லீஸ் சர்வீசஸ் என்ற ஆய்வு நிறுவனத்தின் மூலமாக முக்கிய நிறுவனங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டது. அதன்படி, இந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான நிதியாண்டின் 3ம் காலாண்டில் பணி நியமன இலக்குகள் 65% ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த காலாண்டில் இந்த விகிதம் 61% ஆக மட்டுமே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விகிதம் ஆனது நிதியாண்டின் அடுத்த காலாண்டில் 70% ஆக மேலும் உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதியவர்களுக்கு வேலைவாய்கப்பு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.