10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு ரயில்வே துறையில் காத்திருக்கும் மாபெரும் வேலைவாய்ப்பு – 3115 காலிப்பணியிடங்கள்!
Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை கிழக்கு ரயில்வே துறை கடந்த மாதம் வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, 3115 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ரயில்வே துறை வேலைவாய்ப்பு விவரங்கள் :
- Howrah Division,Liluah Workshop,Sealdah Division,Kanchrapara Workshop,Malda Division, Asansol Workshop, மற்றும் Jamalpur Workshop ஆகிய இடங்களில் 3115 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24 க்குள் இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
- விண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான படிப்பில் (10,+2 தேர்வு முறையின் கீழ்) குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன், அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து, NCVT/SCVT மூலம் பணிக்கு சம்பந்தப்பட்ட வர்த்தகத்தில் தேசிய வர்த்தக சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
- கல்வி தகுதி மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
கிழக்கு ரயில்வே துறையில் பயிற்சியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் 29.10.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.