ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசின் தீபாவளி பரிசு – சூப்பர் அறிவிப்பு!
ரேஷன் அட்டை தாரர்களுக்கு அரசு சார்பாக சூப்பர் பரிசு ஒன்று அளிக்கப்பட உள்ளதாக உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்து உள்ளது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் பயனடைய உள்ளனர்.
தீபாவளி பரிசு:
நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ரேஷன் திட்டம் செயல்பட்டு வருகிறது. ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ள வகையில் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மக்களுக்கு இலவச அரிசி, கோதுமை, மலிவு விலையில் பருப்பு, எண்ணெய் மற்றும் இன்னும் சில மளிகை பொருட்களையும் ரேஷன் கடைகள் வழங்கி வருகின்றது. மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்தும் ரேஷன் கடைகள் மூலமாகவே செயல்படுத்தப்படுகிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. நடப்பு ஆண்டின் தீபாவளி பண்டிகையை ஒட்டி மக்களுக்கு தீபாவளி பரிசு அளிக்க அம்மாநில முதல்வர் முடிவு செய்துள்ளார். கடந்த சட்ட மன்ற தேர்தலுக்கு பிறகு மாநிலத்தில் ரேஷன் பொருட்கள் விநியோகம் முறையாக நடக்காத நிலையில், மக்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தமிழகத்தில் இன்று (அக். 21) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!
Exams Daily Mobile App Download
அதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் தற்போது அக்டோபர் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை இலவசமாக வழங்கப்படும் என்றும், பண்டிகையை ஒட்டி மக்களுக்கு சர்க்கரை கிலோ ரூ.18 என்று வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பால் 3.18 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.