இனி தான் மெயின் ஸ்டோரி இருக்கு.. எதிர் நீச்சல் தொடரில் வரவுள்ள முக்கிய திருப்பம் – லேட்டஸ்ட் அப்டேட்!
சன் டிவியின் இரவு நேர சீரியல்களில் முக்கிய இடத்தில் இருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் இனி தான் கதையின் முக்கிய பாகமே வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்:
சன் டிவியின் பிரைம் டைமில் இரவு 9:30 மணிக்கு இந்த ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி முதல் ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் எதிர் நீச்சல். பல கதாபாத்திரங்கள் நிறைந்த கூட்டு குடும்ப கதையாக எதிர்நீச்சல் உள்ளது. அதிலும், வெள்ளித்திரை நாயகி கன்னிகா பல வருடங்களுக்கு பிறகு சின்னத்திரையில் இந்த சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
நான்கு அண்ணன் தம்பிகளும், அவர்களின் மனைவியரும் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். அதிலும், இந்த குடும்பத்து ஆண்கள் அனைவரும் அதிக ஆணாதிக்க குணம் நிறைந்தவர்களாக உள்ளனர். இவர்களின் மனைவியாக கன்னிகா, பிரோயதர்ஷினி, ஹரிப்பிரியா மற்றும் கதையின் நாயகியாக மதுமிதா ஜனனி நடித்து வருகின்றனர். இந்நிலையில், ஜனனி வீட்டை விட்டு தற்போது வெளியேறி உள்ளார்.
விஜய் டிவி போட்ட மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகிடுச்சே.. சேனலை தூக்கி நிறுத்திய 2 சீரியல்கள் இதுதான்!
Exams Daily Mobile App Download
பல திறமைகள் இருந்தும் கூண்டு கிளியாக இவ்வளவு நாள் சிறைப்பட்டு இருந்த ஜனனிக்கு இனி தான் விடிவு காலமே. ரசிகர்கள் பலரும் கதையின் இந்த திருப்பத்திற்கு தான் காத்து இருந்தனர். அதற்கு ஏற்றார் போல இனி தான் கதையின் மெயின் ஸ்டோரி வர உள்ளதாக நாயகி ஜனனி ரோலில் நடித்து வரும் மதுமிதா தனது சமுக வலைப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் அடுத்து வரும் கதை திருப்பங்களை ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்