நான் பிக் பாஸ் வீட்டில் தங்குறேன்.. ஆனால் ஒரு Condition – பிக் பாஸிற்கே ட்விஸ்ட் வைத்த ஜிபி முத்து!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சி தொடங்கி 2 வாரமே ஆன நிலையில், போட்டியாளர்கள் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு ஜிபி முத்து வெளியேற போகிறாரா என்ற பதற்றம் அனைவருக்கும் இருக்கிறது. அது பற்றிய அப்டேட் தற்போது வந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி:
பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சி மக்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி ஆகும். இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் 2 வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. வழக்கமான ஆரவாரத்துடன் இருந்த இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்களும் விளையாட்டை நன்றாக புரிந்து கொண்டு விளையாடி வருகின்றனர். அதில் அதிகமான ஆதரவை பெற்று இந்த நிகழ்ச்சியின் ஸ்டார் போட்டியாளராக ஜிபி முத்து இருந்து வருகிறார்.
Follow our Instagram for more Latest Updates
மேலும் அவர் இந்த வார தலைவராக, கடுமையான டாஸ்க் ஒன்றில் 2 மணி நேரம் நின்று வெற்றி பெற்று இருக்கிறார். ஆனால் கடந்த 2 நாட்களாக நடந்து வரும் கதை சொல்லும் டாஸ்க் காரணமாக, ஜிபி முத்துவிற்கு வீட்டின் நியாபகம் வந்துள்ளது. அவருடைய மகன் விஷ்ணுவிற்கு உடல்நிலை சரி இல்லை என்ற நியாபகமும் வந்துள்ளது. அதனால் வருத்தப்பட்ட அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு போக வேண்டும் என பிடிவாதம் பிடித்து வருகிறார். பிக்பாஸ் அவரை தனியாக அழைத்து பேசினாலும், நான் 20 நாட்கள் தான் இருப்பேன் என சொல்லிவிட்டு தான் வந்தேன். என்னால் இருக்க முடியாது மூச்சு முட்டுகிறது. நான் உடனே வெளியே போக வேண்டும் என சொல்ல, உண்மையாகவே வெளியே வந்துவிட்டார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
திடீரென முடிவுக்கு வரும் விஜய் டிவியில் ஹிட் சீரியல்? வெளியான முக்கிய தகவல்!
Exams Daily Mobile App Download
ஆனால் அது குறித்த உறுதியான தகவல் வெளியாகவில்லை. அதாவது ஜிபி முத்து பிக்பாஸிடம் இன்னும் 20 நாட்கள் மட்டுமே என்னால் இருக்க முடியும், நான் சொல்லி தான் வந்தேன் என சொல்லி கண்டிசன் போடுகிறார். அதற்கு பிக்பாஸ் மறுப்பு தெரிவிக்காமல் வீட்டிற்குள் ஜிபி முத்துவை அனுப்பி வைத்துள்ளார். ஜிபி முத்து தொடர்ந்து 100 நாட்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என அவருடைய ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். என்ன நடக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.