திடீரென முடிவுக்கு வரும் விஜய் டிவியில் ஹிட் சீரியல்? வெளியான முக்கிய தகவல்!
விஜய் டிவி சீரியல்கள் அனைத்தும் புது கன்டென்ட் உடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், பிரபலமான சீரியலில் ஒன்றான “காற்றுக்கென்ன வேலி” சீரியல் விரைவில் முடிய இருக்கிறதா என்ற கேள்விக்கு தற்போது விளக்கம் கிடைத்துள்ளது.
காற்றுக்கென்ன வேலி சீரியல்:
தமிழ் சின்னத்திரையில் ஏகப்பட்ட சீரியல்கள் இருந்தாலும் விஜய் டிவி சீரியல்களை மக்கள் விரும்பி பார்க்கின்றனர். அனைத்து சீரியல்களும் புதுவிதமான கதையுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் பல சீரியல்கள் அதிகமான TRPயை பெற்று சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் பல எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “காற்றுக்கென்ன வேலி”. இந்த சீரியல் வெற்றிக்கு சூர்யா வெண்ணிலா ஜோடியின் காதல் காட்சிகள் தான் காரணமாக இருக்கிறது.
பிக் பாஸ்ஸில் பயங்கரமாக மோதிக் கொண்ட அசல் தனலட்சுமி.. அதிர்ச்சியில் சக போட்டியாளர்கள்!
Exams Daily Mobile App Download
இந்த சீரியல் தொடக்கத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசையால் வீட்டை விட்டு வெளியே வருகிறார் கதாநாயகி. வெண்ணிலா படிக்கும் காலேஜில் தான் சூர்யா பேராசிரியராக இருக்கிறார். இந்த சீரியல் கதாபாத்திரங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டு இருந்தாலும், அனைத்து மாற்றங்களுக்கும் மத்தியில் மக்கள் விரும்பும் சீரியலாக இந்த சீரியல் இருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியல் விரைவில் முடிய இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று வைரலாகி வருகிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
ஆனால் அது குறித்த விளக்கம் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. அதாவது காற்றுக்கென்ன வேலி சீரியலில் கதை வேகமாக நகர்வதால் தான் இந்த கேள்வி எழுந்துள்ளதாகவும், ஆனால் இன்னும் 150 எபிசோடுகள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 150 எபிசோடுகள் என்றால் இன்னும் 6 மாதத்திற்கு கதை இருக்கிறது. அதனால் இப்போதைக்கு சீரியல் முடிய வாய்ப்பில்லை என்பது உறுதியாக இருக்கிறது.