அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. தீபாவளி போனஸ் அறிவிப்பு – அதிரடி உத்தரவு!
நாடு முழுவதும் வருகிற அக். 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், புதுச்சேரி அரசு குருப் ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு ஊழியர்களுக்கு, இந்த ஆண்டு தீபாவளிக்கான போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தீபாவளி போனஸ்:
மக்கள் மத்தியில் முக்கியமான பண்டிகையான தீபாவளி பண்டிகை, நாடு முழுவதும் விமர்சையாக வருடாவருடம் கொண்டாடப்படும். ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 24 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அதனால் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கான போனஸ் குறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த நிதி ஆண்டுக்கான இடைக்கால போனஸ் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கடந்த நிதி ஆண்டில் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் தொடர்ந்து பணியில் இருந்தவர்களுக்கு இடைக்கால போனஸ் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து புதுச்சேரி அரசும், தனது அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையை அறிவித்துள்ளது. அதன் படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுவை மாநில அரசில் பணிபுரியும் பிரிவு ‘பி ‘ மற்றும் ‘சி ‘ ஊழியர்களுக்கு போனஸ் வழங்க இருப்பதாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் தீபாவளி போனஸ் தொகையானது மாநில அரசில் பணிபுரியும் உற்பத்தி சம்பந்தப்பட்ட போனஸ் பெறாத பிரிவு ‘பி’ (அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள் தவிர்த்து) ஊழியர்கள் மற்றும் பிரிவு ‘சி’ ஊழியர்களுக்கு ரூ.6,908 எனவும், முழுநேர தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.1,184 போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை புதுவை நிதித்துறை சார்பு செயலர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். அதனால் புதுச்சேரி அரசு ஊழியர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்