தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் கவனத்திற்கு – தேர்வு துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஏற்கனவே தற்காலிக சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. இது குறித்து அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மதிப்பெண் சான்றிதழ்:
தமிழகத்தில் 2 வருடங்களுக்கு பிறகு கடந்த 2022 – 2023ம் கல்வியாண்டில் தான் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது. இந்த நிலையில் 10,11ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. இதனையடுத்து விரைந்து பாடங்கள் நடத்தி முடிக்கபட்டு அட்டவணையின் படி கடந்த மே மாதம் தேர்வுகள் தொடங்கி அம்மாத இறுதி வரை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கடந்த 20ம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மேலும் குறுச்செய்திகள் வாயிலாக மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டது. இந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மட்டும் 90.07% பேர் தேர்ச்சி பெற்றனர். அடுத்தாக 12ம் வகுப்பில் 93% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் வெளியான பிறகு ஆகஸ்ட் மாதம் தேர்வில் தோல்வியுற்ற மற்றும் பங்கேற்காத 10ம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத் தேர்வுகள் நடைபெற்றது.
எச்சரிக்கை அறிவிப்பு.. தமிழகத்தில் நாளை (அக்.12) இந்த பகுதிகளில் Power Cut!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் மாணவர்கள் உயர் கல்வியில் சேர ஏதுவாக இணையதளம் வாயிலாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது பொதுத்தேர்வு, துணைத்தேர்வு ஆகியவற்றின் முடிவுகள் வெளியிடப்பட்டு, மறு கூட்டல், விடை நகலுக்கு விண்ணப்பித்தல் போன்ற பணிகள் நிறைவடைந்ததை அடுத்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கபடவுள்ளது. வரும் அக்டோபர் 14ம் தேதி முதல் காலை 10 மணி முதல் பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்