தமிழகத்தில் 2,748 அரசு பணிகளுக்கான வாய்ப்பு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு முதல் தற்போது வரைக்குமான கிராம உதவியாளர் பதவிக்கான காலியிடங்களுக்கு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பது தொடர்பாக தமிழக வருவாய் துறை மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு வெளியிட்டுள்ளது.
கிராம உதவியாளர்:
தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அசிஸ்டன்ட்டான கிராம உதவியாளர் பணிக்கு கடந்த 2019ம் ஆண்டு முதல் தற்போது வரையில் பணியாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை. இதனால் கிராம உதவியாளர் பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்படி, 1.10.2019 தேதியில் இருந்து 30.9.2022 வரை 2,748 கிராம உதவியாளர் பணியிடங்கள் உள்ளதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
5ம் வகுப்பை கல்வித்தகுதியாக கொண்ட இந்த பணிக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் கிராம உதவியாளர் பணிக்கு நியமனம் செய்யப்படும். எழுத்துத்தேர்வில் கிராமங்களின் தகவல்கள், நிலவகைப்பாடு, கிராமத்தின் கணக்குகள் போன்றவை குறித்து 100 வார்த்தைகளுக்கு மிகாமல் அல்லது மாவட்ட ஆட்சியர் அப்போது அளிக்கும் தலைப்பின் கீழ் ஒரு பத்தி எழுத வேண்டும், அதன்பிறகு, ஒரு நல்ல தரம் மிகுந்த புத்தகத்தில் இருந்து வாசிப்பு திறனை சோதிக்கும் வகையில் வாசிக்க வேண்டும். இந்த தேர்வு முறைகள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரின் கீழ் உள்ள துணை ஆட்சியர் பதவியில் உள்ள அதிகாரியின் மூலம் கண்காணிக்கப்பட வேண்டும்.
மத்திய அரசின் ஜேஇஇ தேர்வு – அரங்கேறிய மோசடிகள்! CBI விசாரணை!
Exams Daily Mobile App Download
இந்த பணிக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 7ம் தேதிக்குள் அளிக்கப்பட வேண்டும் என்றும், நவம்பர் 14ம் தேதி அன்று விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, இவர்களுக்கான எழுத்துத்தேர்வு நவம்பர் 15 மற்றும் 16ம் தேதிகளில் நடத்தப்பட்டு, அதன்பிறகான நேர்காணலில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு டிசம்பர் 19 ம் தேதி அறிவிப்பு செய்து, அன்றைய தினத்திலேயே பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்