அக்.09-ம் தேதி மதுக்கடைகள் மூடல் – காவல்துறையின் முக்கிய அறிவிப்பு! மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!
நாடு முழுவதும் 2022ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் இந்த தினத்தன்று புதுவையில் அனைத்து மது கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுக்கடைகள்:
இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் மிலாடி நபி திருநாளாக இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இறை தூதரான நபிகள் நாயகம் இஸ்லாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தின் 12 ஆம் நாள் மெக்காவில் பிறந்தார். நபிகள் நாயகம் பிறப்பதற்கு முன்னரே அவரது தந்தை காலமானார். பிறகு அவரின் தாயாரும் அவரின் 6-வது வயதில் காலமானார். அதனால் இவர் தனது பாட்டனாரால் வளர்க்கப்பட்டார். இவர் இளமைப் பருவத்திலேயே நற்குணத்துடனும் விளங்கினார். அத்துடன் மற்றவர்களிடம் நம்பிக்கையை விதைத்தவர் இவர்.
அதனால் இவர் மக்களால் நம்பிக்கையாளர் என்றும் அழைக்கப்பட்டார். தனது வாழ்க்கை முழுவதிலும் அவர் உண்மை மற்றும் ஒழுக்கத்தை கடைப்பிடித்தார். இவரை 40ம் வயதில் அல்லாஹ் தனது துாதராக அறிவித்தார். இவரது தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் மிலாடி நபி திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் வரும் அக்டோபர் 9ம் தேதி மிலாடி நபி கொண்டாடப்பட உள்ளது.
Exams Daily Mobile App Download
அனைத்து அரசு பள்ளிகளும் CBSE பள்ளிகளாக மாற்றம் – தர்மேந்திர பிரதான் தகவல்!
இதனை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து புதுவையில் அக்டோபர் 9ம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அங்கு அனைத்து வித மது விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்