தமிழக அரசு ஓய்வூதியதார்ரகளுக்கு ஜாக்பாட் – அகவிலைப்படி உயர்வு! உயர்நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு அகவிலைப்படி வழங்குவது குறித்து உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அகவிலைப்படி:
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த வருடம் 2 கட்டமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இதன் மூலம் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் பெற்றனர். மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசு ஊழியர்களும் அகவிலைப்படி உயர்வு வேண்டி கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு தேர்தலின் போது வாக்குறுதி அளித்த படி அரசு ஊழியர்களுக்கு 2022 ஜனவரி மாதம் அகவிலைப்படியை உயர்த்தியது.
அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – அமலாகும் புதிய உத்தரவு!
அதாவது நடைமுறையில் இருந்த 17% இருந்து 31% ஆக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் மாநில அரசு ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து கடந்த மாதம் 15ம் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது பேசிய முதல்வர் முக ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார். இது குறித்த அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தமிழக அரசின் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு நவம்பர் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் போக்குவரத்து கழக ஓய்வூதிய நிதி அறக்கட்டளைக்கு உத்தரவிட்டுள்ளது. மற்ற துறைகளை தொடர்ந்து மின்வாரிய ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார வாரிய ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அரசாணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்