அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – அமலாகும் புதிய உத்தரவு!

0
அரசு ஊழியர்கள் கவனத்திற்கு - அமலாகும் புதிய உத்தரவு!
அரசு ஊழியர்கள் கவனத்திற்கு - அமலாகும் புதிய உத்தரவு!
அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – அமலாகும் புதிய உத்தரவு!

புதுவை அரசின் அனைத்து துறை ஊழியர்களும் கட்டாயம் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் போது ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

ஹெல்மெட் கட்டாயம்:

வாகனத்தில் செல்லும் போது ஏற்படும் விபத்துகளின் காரணமாக அதிக அளவிலான உயிரிழப்புகள் பதிவாகி வருகிறது. இத்நல் வாகன ஓட்டிகளுக்கு அடிக்கடி சாலை பாதுகாப்பு விதிகளை அரசு அறிவுறுத்தி வருகிறது. இதை தவிர பலவிதங்களிலும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், புதுவையில் வாகன விபத்துகள் மூலம் கடந்த ஆகஸ்ட் வரை 82 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 63 பேர் தலையில் அடிபட்டு பலியாகியுள்ளனர்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் – முதல்வர் வெளியிட்ட தகவல்!

இதனால் புதுவை அரசு வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் அறிவித்துள்ளது. அதன்படி, இரு சக்கர வாகனங்களில் முன்னால் மற்றும் பின்னால் அமர்ந்திருக்கும் இருவரும் தலைக்கவசத்தை அணிய வேண்டும். காரில் செல்லும் போதும், அனைவரும் சீட் பெல்ட்டை அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில், புதுவை காவல் துறையினர் மற்றும் அரசு ஊழியர்கள் மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் அதனால், புதுவையில் அனைத்து துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு துறை வாரியாக விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!