நாளை (19-09-2022) தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் – முழு லிஸ்ட் இதோ உங்களுக்காக!
தமிழகத்தில் மின்வாரியத்தின் மின் நிலையங்களில் மாதம் தோறும் முறையாக பராமரிப்பு பணிகள் செய்யப்படுகிறது. நாளை மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் அரசு மின்சாரத்துறையில் முக்கிய மாற்றங்களை அதிரடியாக செய்து வருகிறது. மாதம் 100 யூனிட்கள் இலவச மின்சாரம் அனைவருக்கும் அளிக்கப்படுகிறது. இதனால் மின்துறையில் அதிக நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் வகையில் தற்போது செப்டம்பர் 10ம் தேதி முதல் தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு இந்த முடிவில் உறுதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், மின்வாரியத்தில் ஏற்படும் பழுதுகளை சரி செய்யவும், முறையாக இயந்திரங்கள் மற்றும் மின்பாதைகளை பராமரிக்கவும் மாதம் தோறும் 1 முறை மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் செய்யப்படுகிறது. அந்த வகையில் செப்டம்பர் 19ம் தேதியான நாளை திங்கட்கிழமை காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட லப்பாளையம், பழையகோட்டை, காடையூா் ஆகிய துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் அவர்கள் அறிவித்துள்ளார்.
இந்த நாட்களில் வீட்டுக்குள்ள இருக்குறது உங்களுக்கு Safe.. தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!
அதன்படி, லப்பாளையம் துணை மின் நிலையத்தின் லப்பாளையம், கண்ணபுரம், பா.பச்சாபாளையம், மருதுறை, முள்ளிப்புரம், செட்டிபாளையம், பகவதிபாளையம், காங்கேயம்பாளையம், முருகன்காட்டு வலசு,பழையகோட்டை துணை மின் நிலையத்தின் பழையகோட்டை, நத்தக்காடையூா், குட்டப்பாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம், கொல்லன்வலசு, வடபழனி, கண்ணம்மாபுரம் மற்றும் காடையூா் துணை மின் நிலையத்தின் காடையூா், கவுண்டம்பாளையம், பசுவமூப்பன்வலசு, சடையபாளையம், சம்மந்தம்பாளையம், மேட்டுப்பாறை, பொன்னங்காளிவலசு ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்