செப்டம்பர் 13ஆம் தேதி வரைக்கும் அதிகனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் வரும் செப்டம்பர் 13-ம் தேதி வரைக்கும் அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
கனமழை:
இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பல பகுதிகளில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், ஒரு சில பகுதிகளில் மிதமான முதல் லேசான கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை மற்றும் அதனை ஒட்டிய தானே, ராய்காட், பால்கர், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களில் வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி வரைக்கும் பலத்த காற்றுடன் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், கொங்கன்-கோவா மற்றும் மத்திய மகாராஷ்டிரா பகுதிகளுக்கு வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கையும், மும்பை, புனே, சதாரா, கோலாப்பூர், நாசிக், விதர்பா மற்றும் மராத்வாடா ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 5,554 பேருக்கு தொற்று உறுதி – மத்திய சுகாதாரத்துறை தகவல்!
Exams Daily Mobile App Download
மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் ஆற்றங்கரைகளில் தண்ணீர் தேங்கி சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மிக அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மேலும், கடல் அலைகள் அதிகம் உள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்