தமிழகத்தில் இந்தாண்டு 100% அதிகமாக மழை பொழிவு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் வழக்கத்திற்கும் மாறாக இந்தாண்டு 100% அதிகமாக மழை பொழிவு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், நாளையும் ஒரு சில இடங்களில் மழைப்பொழிவு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை மையம் தகவல்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமா காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் அதிகமான மழைப்பொழிவு இருந்து வருகிறது. மேலும், பெரும்பாலான மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைப்பொழிவு இருந்து வருகிறது. இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
10 & 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஒரே பாடத்திட்டம்? மத்திய அரசு விளக்கம்!
அதே போல நாளையும் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், ஒரு சில இடங்களில் லேசான கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் நாளை கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரைக்கும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு வழக்கத்திற்கும் மாறாக 88% கூடுதலாக மழை பெய்துள்ளது. மேலும், கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரைக்கும் பார்க்கும் போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே 93% கூடுதலாக மழை பதிவாகியிருக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள 18 மாவட்டங்களில் இயல்பைவிட 100% அதிகமாக மழை பதிவாகியிருக்கிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்