10 & 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஒரே பாடத்திட்டம்? மத்திய அரசு விளக்கம்!
நாடு முழுவதும் ஒவ்வொரு மாணவரும் வெவ்வேறு விதமான பாடத்திட்டங்களை படித்து வரும் நிலையில் மத்திய அரசு தற்போது 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வரலாம் என திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டம்
இந்தியாவில் மாநில மற்றும் மத்திய கல்வி வாரியங்களில் வெவ்வேறு பாடத்திட்டங்கள் பின்பற்றப்படுவதால் மதிப்பெண்களில் ஏராளமான ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. இதனால் இடைநிலை மற்றும் மேல்நிலை மாணவர்களின் நிலையை அறிய மாநிலம் முழுக்க ஒரே பாடத்திட்டத்தை கொண்டுவர வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, கடந்த சில வாரங்களாகவே தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) மாநில வாரியங்கள் மற்றும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்களின் (SCERT) பிரதிநிதிகள் மாநிலம் முழுக்க ஒரே பாடத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு கொண்டிருக்கிறது.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு – உயர்கல்வி கட்டண செலவை அரசே ஏற்பு!
மேலும், இதற்காகவே புதிய மதிப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் PARAKH அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்துடனும் கலந்துரையாடிய போது பெரும்பாலான மாநிலங்கள் வருடத்திற்கு இரண்டு முறை தேர்வினை நடத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். மேலும், கணிதத்தில் இரண்டு தாள்களை அறிமுகம் செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, முதல் தாள் நிலையான தேர்வாகவும், இரண்டாம் தாள் மாணவர்களின் உயர் மட்ட திறனை சோதிக்கும் தேர்வாகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், இந்த புதிய திட்டம் மாணவர்களுக்கு கணிதத்தின் மீது இருக்கும் பயத்தை குறைக்கும் எனவும், கற்றலை ஊக்குவிக்கம் உதவும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கணிதம் மட்டுமல்லாமல் அனைத்து பாடங்களுக்கும் இரண்டு செட் வினாத்தாள்கள் இருக்க வேண்டும் என தேசிய கல்வி கொள்கை அறிவித்துள்ளது. அதில் ஒரு தாள் MCQ முறையிலும், மற்றொன்று விளக்கமளிக்கும் வகையிலும் தேர்வு நடத்தப்படும் எனவும் கல்வி அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்