மீண்டும் தொழிலை துவங்கும் பாக்கியா, மகிழ்ச்சியில் குடும்பத்தினர் – சீரியலில் அடுத்த புதிய திருப்பங்கள்!
கோபியை பாக்கியா வீட்டை விட்டு வெளியே அனுப்பியதால் குடும்பத்தினர்கள் திட்டிக்கொண்டே இருந்தனர். இந்த நிலையிலும் பாக்கியா குடும்பத்திற்காக உழைக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் தொழிலை துவங்கும்படியான ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை பாக்கியா வீட்டை விட்டு வெளியே அனுப்பியதால் செழியன், இனியா, ஈஸ்வரி என அனைவரும் பாக்கியாவை கண்டபடி திட்டி கொண்டிருக்கின்றனர். ஆனால், ராமமூர்த்தி தாத்தா மற்றும் எழில் மட்டும் தான் பாக்கியாவின் நிலைமையை புரிந்து கொண்டு ஆதரவாக இருக்கின்றனர். ஆனால், கோபி வீட்டில் இருந்து விரட்டிவிட்டார்களே என கொஞ்சம் கூட கவலைப்படாமல் ராதிகாவை தேடி சென்று விட்டார்.
ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – அமலாகும் முக்கிய மாற்றங்கள்!
கோபியின் கவலை முழுவதுமே ராதிகாவை எப்படி திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பது என்பது பற்றி தான். ஆனால், தற்போது வரைக்கும் கோபியை ஏற்றுக்கொள்ள கூடாது என்பதில் ராதிகா தெளிவாக இருக்கிறார். ஆனால், சில நேரங்களில் கோபியை தவிர்க்கவும் முடியாமல் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் ராதிகா தள்ளாடி கொண்டிருக்கிறார். இறுதி வரைக்குமே ராதிகா கோபியை ஏற்றுக்கொள்ள மாட்டாரா அல்லது பாக்கியாவுக்கும் கோபிக்கும் விவகாரத்து ஆகிவிட்டதே என நினைத்து கோபியை ஏற்றுக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
இதற்கு இடையே பாக்கியாவும் கோபிக்கு 40 லட்சம் தருகிறேன் என சவால் விட்டிருக்கிறார். குடும்பமும் ஆதரவாக இல்லாமல் பாக்கியாவை குறை சொல்லி கொண்டிருக்கின்றனர். இந்த நிலையையில் பாக்கியா என்ன முடிவெடுக்க போகிறார் என எதிர்பார்த்த நேரத்தில் குடும்பத்தை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என நினைத்து மீண்டும் தனது வேலையை துவங்குகிறார். குடும்பத்தினர்கள் என்ன நினைத்தாலும் திட்டினாலும் பரவாயில்லை என நினைத்து பாக்கியா பழையபடி தொழிலை துவங்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்