ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – அமலாகும் முக்கிய மாற்றங்கள்!

0
ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு - அமலாகும் முக்கிய மாற்றங்கள்!
ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு - அமலாகும் முக்கிய மாற்றங்கள்!
ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – அமலாகும் முக்கிய மாற்றங்கள்!

திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் சில பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரைக்கும் சில முக்கிய ரயில்களின் வழித்தடம் மற்றும் ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய மாற்றங்கள்

திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் பொறியியல் மேம்பாடு மற்றும் மின் இணைப்பு மாற்றம் செய்யும் பணி நாளை முதல் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரைக்கும் நடைபெற இருக்கிறது. இதனால், திருப்பத்தூர் ரயில்வே நிலையத்தில் நின்று செல்லும் ரயில்களின் வழித்தடம் மற்றும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் எந்தெந்த வழித்தடத்திற்கு ரயில் மாற்றப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொண்டு பயணத்தை தொடங்குமாறு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை: ஆபரண தங்க விலை அதிரடியாக குறைவு – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!

அதாவது, நாளை, ஆகஸ்ட் 28, 29, ஆகிய 3 நாட்களும் மங்களூருவில் இருந்து சென்னை செல்லும் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் (22638) ரயில் சென்னை செல்லாமல் சேலம் வரை மட்டுமே செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல சேலத்தில் இருந்து மீண்டும் புறப்பட்டு மங்களூரு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக ஆகஸ்ட் 29, 30, 31 ஆகிய மூன்று நாட்களும் ஆலப்புழாவில் இருந்து கிளம்பி தன்பாத் ரயில் (13352) காலை 6:00 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 7 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
https://www.youtube.com/watch?v=amTkOGyCYAM

மேலும், ஆகஸ்ட் 28, 30 ஆம் தேதிகளில் பெங்களூருவில் இருந்து கோவைக்கு செல்லும் உதய் டபுள்டெக்கர் எக்ஸ்பிரஸ் (22665) ரயில் மதியம் 2:15 மணிக்கு கிளம்புவதற்கு பதிலாக மாலை 3:15 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எர்ணாகுளத்தில் இருந்து டாடாநகர் செல்லும் எக்ஸ்பிரஸ் (18190) ரயில் காலை 7:15 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 8:45 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 30 ஆம் தேதி பிலாஸ்பூரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரயில் காட்பாடி, சேலம் வழியாக செல்லாமல் விழுப்புரம், விருத்தாச்சலம் வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிறகு ஆகஸ்ட் 31ஆம் தேதி அதே ரயில் காலை 8:30 மணிக்கு பதிலாக காலை 11:15 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!