EPS வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அப்டேட் – இரட்டிப்பாகும் ஓய்வூதியம்! முழு விவரம்!
நாடு முழுவதும் பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் (இபிஎஸ்) முதலீட்டின் உச்சவரம்பு விரைவில் நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் அது குறித்து விரைவில் முடிவு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இபிஎஸ் முக்கிய அறிவிப்பு:
நாடு முழுவதும் உள்ள ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் (இபிஎஸ்) முதலீட்டின் உச்சவரம்பு விரைவில் நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த திட்டம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இந்த திட்டம் குறித்து ஊழியர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இபிஎஸ் வரம்பை நீக்குவது என்பது, உங்களின் ஓய்வூதியத்துக்கான அதிகபட்ச சம்பளம் மாதம் 15,000 ரூபாய் ஆகும். அதாவது உங்களது சம்பளம் எவ்வளவாக இருந்தாலும் ஓய்வூதியத்தின் கணக்கீடு ரூ.15,000 இல் மட்டுமே இருக்கும். இந்த வரம்பை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. மேலும் இந்திய யூனியன் மற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) ஊழியர்களின் ஓய்வூதியத்துக்கான வரம்பை 15,000 ரூபாயாக வரையறுக்க முடியாது என தாக்கல் செய்த ஒரு தொகுதி மனுக்களின் விசாரணையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தமிழகத்தில் கோவில் திருவிழாக்களுக்கு காவல்துறையிடம் அனுமதி பெற தேவையில்லை – ஐகோர்ட் உத்தரவு!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் இபிஎஸ் விதிகள் என்பது இபிஎஃப்-ல் உறுப்பினராகும்போது, அதே நேரத்தில் இபிஎஸ்-லும் உறுப்பினராகிறோம். ஊழியர் தனது சம்பளத்தில் 12% இபிஎஎஃப் இல் கொடுக்கிறார். அதே தொகையை அவரது நிறுவனமும் கொடுக்கிறது. ஆனால் இந்த 8.33 சதவிகிதத்தில் ஒரு பகுதி இபிஎஸ்- க்கும் செல்கிறது. நாம் மேலே குறிப்பிட்டுள்ளபடி, தற்போது அதிகபட்ச ஓய்வூதிய சம்பளம் 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே. அதாவது ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய பங்கு அதிகபட்சம் (15,000 இல் 8.33%) ரூ 1250 ஆக இருக்கும். ஊழியர் ஓய்வு பெற்றாலும், ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கான அதிகபட்ச சம்பளம் ரூ.15 ஆயிரமாக மட்டுமே கருதப்படுகிறது. இதன்படி, இபிஎஸ்-ன் கீழ் ஒரு ஊழியர் பெறக்கூடிய அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆகும்.
நிபந்தனைகள்:
- ஓய்வூதியத்திற்கு இபிஎஃப் உறுப்பினராக இருப்பது அவசியம்.
- குறைந்தபட்சம் 10 வருடங்கள் வழக்கமான பணியில் இருப்பது கட்டாயமாகும்.
- ஊழியருக்கு 58 வயதாகும்போது ஓய்வூதியம் கிடைக்கும்.
- 50 ஆண்டுகளுக்குப் பிறகும், 58 வயதுக்கு முன்பே ஓய்வூதியம் பெற வசதி உள்ளது.
- முதல் ஓய்வூதியத்தைப் பெறும்போது, குறைக்கப்பட்ட ஓய்வூதியத்தைப் பெறுவீர்கள், இதற்காக நீங்கள் படிவம் 10ஐ நிரப்ப வேண்டும்.
- ஊழியர் இறந்தால், அவரது குடும்பத்திற்கு ஓய்வூதியம் கிடைக்கும்.
- சேவை வரலாறு 10 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால், அவர்கள் 58 வயதில் ஓய்வூதியத் தொகையை திரும்பப் பெறுவதற்கான வசதி கிடைக்கும்.