ஆவின் வாடிக்கையாளர்களுக்கு இனி பாட்டிலில் பால்? முக்கிய தகவல் வெளியீடு!
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்தின் ஆவின் பாலினை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் விற்பனை செய்வதை நிறுத்தி விட்டு, அதற்கு பதிலாக கண்ணாடி பாட்டில்கள் அல்லது காகித அட்டைப்பெட்டிகளை பயன்படுத்தலாமா? என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாட்டிலில் ஆவின் பால்:
நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டு அமலுக்கு வந்தது. இதனை முறையாக அமல்படுத்துமாறு மாநில / யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியது. இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சென்னையின் பிரபல கடற்கரைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. மேலும், பல்வேறு இடங்களில் ரைடு நடத்தப்பட்டு பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தாக்கல் செய்த சீராய்வு மனு விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசின் அடல் பென்சன் யோஜனா திட்டம் – அக்டோபர் 1ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடு!
அது நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து தீங்கு விளைவிக்கும் பொருட்களையும் ஒழிக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும், பிளாஸ்டிக் பால் பாக்கெட்டுகள் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிப்பதாக கண்டறியப்பட்டால், அவை நிச்சயமாக மாற்றப்பட்டு பல ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டது போல் கண்ணாடி பாட்டில்களில் விற்கப்படும் என்றும் கூறினார். இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் அமுல் மற்றும் சில பிராண்டுகள் பாலை காகித அட்டைப்பெட்டிகளில் விற்பனை செய்வதை சுட்டிக்காட்டினார். அதுமட்டுமின்றி நீதிபதி வைத்தியநாதன் கூறுகையில், பாட்டில்கள் மற்றும் கேன்களில் விற்கப்படும் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீரின் தரத்தையும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். அசுத்தங்கள் இல்லாத நல்ல தரமான தண்ணீர் மட்டுமே அந்த கேன்களில் விற்கப்படுவதை உறுதி செய்யுமாறும் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.