மத்திய அரசின் அடல் பென்சன் யோஜனா திட்டம் – அக்டோபர் 1ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடு!
மத்திய அரசின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அடல் பென்சன் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதையடுத்து தற்போது இந்த திட்டத்தில் புதிய கட்டுப்பாடு ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
அடல் பென்சன் யோஜனா
மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு அடல் பென்சன் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் இணைந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை மாதந்தோறும் செலுத்த வேண்டும். இதையடுத்து 60 வயதிற்கு பிறகு ரூ.1000 முதல் 5000 வரை பயனாளிகளுக்கு வழங்கப்படும். இந்த ஓய்வூதியம் முதிர்வு காலத்தில் இவர்களுக்கு பேருதவியாக இருக்கும். இந்த திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இணைந்து கொள்ள முடியும். மேலும் அஞ்சலகம் அல்லது வங்கி ஆகியவற்றில் இந்த திட்டத்திற்கான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து கொள்ளலாம்.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு அட்டை பெறுவது எப்படி?
இதுவரை நாடு முழுவதும் இத்திட்டத்தின் கீழ் 4 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இணைந்துள்ளனர். மேலும் இந்த திட்டத்தில் உள்ள பயனாளி இறந்த பின்பும் இந்த ஓய்வூதியம் அவரின் மனைவிக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஓய்வூதியம் இவர் இறக்கும் வரை வழங்கப்படும். இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு இத்திட்டத்தில் புதிய கட்டுப்பாடு ஒன்றை மத்திய அரசு விதித்துள்ளது. அதன்படி இது குறித்த அறிவிப்பில், அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் வருகிற அக்டோபர் 1ம் தேதி முதல் இணைய கட்டுப்பாடு ஒன்று விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது, வருமான வரி செலுத்துபவர்கள் வருகிற அக்டோபர் 1ம் தேதி முதல் அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் இணைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அக்டோபர் 1ம் தேதிக்குள் இத்திட்டத்தில் இணைய விரும்பும் நபர்களுக்கு எந்தவித தடையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அக்டோபர் 1ம் தேதிக்கு பிறகு இத்திட்டத்தில் இணைப்பவர்கள் வருமான வரி செலுத்துபவர்களா என்று ஆய்வு செய்யப்படும். அவ்வாறு வரி செலுத்துபவர்களா இருந்தால் அவரின் பணம் திருப்பி தரப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.